ஜம்மு காஷ்மீரின் ஹண்ட்வாரா பகுதியில் இருக்கும் 21 ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவின் கட்டளை அதிகாரியான கர்னல் அசுதோஷ் சர்மா, பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டிருந்தபோது வீர மரணம் அடைந்தார்
கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல் கட்டளை அலுவலராக இருக்கும் ராணுவ வீரர் ஒருவர் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழப்பது இதுவே முதல்முறையாகும். முன்னதாக கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடைபெற்ற பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் கர்னல் எம்.என். ராய் உயிரிழந்தார். அதே ஆண்டு நவம்பர் மாதம் கர்னல் சந்தோஷ் மகாதிக் என்பவரும் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தார்.