நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் 26ஆவது ஆதீன கர்த்தராக இருந்து கடந்த ஆண்டு சித்தியடைந்த ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகளுக்கு ஆலயம் கட்டப்பட்டு, அதன் நூதன அஷ்டபந்தன கும்பாபிஷேகம் இன்று(அக்.30) நடைபெற்றது.
இதில் பங்கேற்று வழிபாடு நடத்திய புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, "மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது நாட்டின் முன்னேற்றத்தில் காங்கிரஸ் கட்சி கவனம் செலுத்தியது. அதனால்தான் நாட்டின் பொருளாதாரம் 9 விழுக்காடு உயர்ந்தது. இன்று நாட்டின் பொருளாதாரம் மைனஸ் 8.1 விழுக்காடாக உள்ளது.
பிகார், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்காளம் மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் கரோனா காலத்தில் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியதையடுத்து, அங்கு வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. வேலை வாய்ப்பை இழந்தவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும். விலைவாசி குறைப்பு, சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வருதல், மக்களைப் பாதுகாத்தல் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.