தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட்டாக மாறிய இந்தியாவின் தூய்மையான நகரம்! - cleanest city indore noe change to corona virus hotspot

போபால்: இந்தியாவின் தூய்மையான நகரமாக புகழ்பெற்ற இந்தூர் தற்போது கரோனாவின் இருப்பிடமாக மாறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

sdsd
sd

By

Published : Apr 9, 2020, 12:51 PM IST

இந்தியாவின் தூய்மையான நகரம் என்ற பெருமை நான்காவது முறையாக மத்தியப் பிரேதச்சத்தின் இந்தூருக்கு கிடைத்துள்ளது. மிகவும் பரபப்பான இந்தூர் நகரத்தில் உள்ள குப்பைகள் அனைத்தும் அகற்றப்படுவது மட்டுமின்றி மக்கும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுகிறது. இத்தகைய அழகான நகரத்தில் தற்போது கரோனா வைரஸ் உள்ளே புகுந்து ஆட்டம் காட்டி வருகிறது. இதுவரை இந்தூரில் 173 நபர்கள் கரோனா வைரஸ்சினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை ஆர்வலர் அமுல்யா நிதி கூறுகையில்," கரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்தூர் அரசு அலுவலர்கள் விமான நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர் ஆனால், ரயில், சாலை வழியாக கரோனா பாதித்தவர்கள் வரலாம் என்பதை மறந்து விட்டனர். சுமார் 30 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்தூர் நகரத்தில், மார்ச் முதல் வாரத்திலே ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருக்கவேண்டும் என்றார்.

இதைத் தொடர்ந்து, மகாத்மா காந்தி நினைவு மருத்துவக் கல்லூரி தலைமை அலுவலர் கூறுகையில், "இந்தூரின் தாத் பட்டி பக்கால் பகுதியில், சமீபத்தில் ஒரு கரோனா நோயாளியுடன் தொடர்பு கொண்ட ஒரு நபரைக் கண்டுபிடிக்க மருத்துவக் குழுவினர் சென்ற போது அவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடைபெற்றது. இதில், இரண்டு பெண் மருத்துவர்கள் காயமடைந்தனர்.

இச்சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் , உள்ளூர் நிர்வாகம் பால், மளிகை பொருள்கள், காய்கறிகள் போன்ற அத்தியாவசியப் பொருள்களை வீட்டுக்கு நேரடியாக வழங்கும் ஏற்பாடுகளைச் செய்துள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கரோனா அச்சுறுத்தல்: இந்தியாவில் உயிரிழந்த முதல் மருத்துவர்

ABOUT THE AUTHOR

...view details