உச்ச நீதிமன்ற, சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான ஆர். பானுமதி "நீதித்துறை, நீதிபதிகள் மற்றும் நீதி நிர்வாகம்" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இதை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே டெல்லியில் இன்று (செப்டம்பர் 12) வெளியிட்டார்.
அப்போது நீதிபதி எஸ்.ஏ.போப்டே பேசுகையில், "பல்வேறு நீதிமன்றங்களில் எனது மாறுபட்ட அனுபவத்தின் காரணமாக ஒவ்வொரு கட்டத்திலும் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்கிறேன். நீதிபதிகளை விமர்சிக்க சட்டத்தைப் பயன்படுத்தும் மற்றவர்களின் சுதந்திரத்தை நிலைநிறுத்த அதே சட்டங்களால் நீதிபதிகளின் பேச்சு சுதந்திரம் குறைக்கப்படுகிறது.