தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 28, 2020, 5:03 PM IST

ETV Bharat / bharat

'யுபிஎஸ்சி தேர்வை ஒத்திவைக்க முடியாது' - உச்ச நீதிமன்றத்தில் யுபிஎஸ்சி திட்டவட்டம்!

சிவில் சர்வீஸ் தேர்வு ரத்து செய்வது தொடர்பான வழக்கில் தேர்வை ஏன் ஒத்திவைக்க முடியாது என்ற காரணங்களை பட்டியலிட்டு நாளை (செப்.29) பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யுமாறு யுபிஎஸ்சிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

upsc
upsc

டெல்லி:சிவில் சர்வீஸ் தேர்வு ரத்து செய்வது தொடர்பான வழக்கில் தேர்வை ஏன் ஒத்திவைக்க முடியாது என்ற காரணங்களை பட்டியலிட்டு நாளை (செப்.29) பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யுமாறு யுபிஎஸ்சிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு வரும் அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெறும் என, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருந்தது. ஆனால், கரோனா தொற்று, வட மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கைக் கருத்தில் கொண்டு யுபிஎஸ்சி தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என, தேர்வு எழுதும் 20 பேர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்தநிலையில், இன்று(செப்.28) இவ்வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம். கன்வில்கர் மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றத்தில் பதிலளித்த மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வை ஒருபோதும் ஒத்திவைக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தது.

இதையடுத்து நீதிபதிகள், யுபிஎஸ்சி தேர்வை ஏன் ஒத்திவைக்க முடியாது என்ற காரணங்களை பட்டியலிட்டு நாளை(செப்.29) பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details