தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தொழுகை முடிந்து வீடு திரும்பியவர்கள் மீது தாக்குதல்: 3 பேர் உயிரிழப்பு - வடக்கு வஜீரிஸ்தான் மிர் அலி தாக்குதல்

மிர் அலி: பாகிஸ்தானில் ரமலான் தொழுகையை முடித்துவிட்டு வீடு திரும்பியவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

terror attack
terror attack

By

Published : May 26, 2020, 1:57 PM IST

பாகிஸ்தானின் வடக்கு வஜீரிஸ்தான் மிர் அலி நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் மூத்த அரசு ஊழியர் உள்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இந்தச் சம்பவமானது நடைபெற்றதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஜுபைதுல்லா கான், ஃபர்மானுல்லா, நைமத்துல்லா ஆகிய மூவர் இந்தத் தாக்குதலில் உயிரிழந்திருக்கின்றனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த மூன்று பேரும் ரமலான் தொழுகையை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த சமயத்தில் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

இது குறித்து வடக்கு வஜீரிஸ்தான் காவல் துறை விசாரணையில், இந்தத் தாக்குதலுக்கு பயங்கரவாதிகள் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கின்றனர்.

அதனால் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்கு காவலர்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.

இதையும் படிங்க:பாலகோட் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்

ABOUT THE AUTHOR

...view details