ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது பத்திரிக்கையாளர்களிடம் ஐந்து விழுக்காடு வளர்ச்சி என்று இந்தியப் பொருளாதாரத்தை விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், அவரது ட்விட்டர் கணக்கில், தனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தவர் கடந்த சில நாட்களாக ஏழைகளிடம் உரையாடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்ததாகவும் நீதியையும் அநீதியையும் வேறுபடுத்திப் பார்க்கும் ஏழைகளின் திறனைக் கண்டு வியப்படைவதாகவும் கூறியுள்ளார்.