தமிழ்நாடு

tamil nadu

சத்தீஸ்கரில் 400 கிலோ கஞ்சா பறிமுதல்; சிறுவர்கள் உள்பட 7 பேர் கைது!

By

Published : Aug 2, 2020, 8:22 PM IST

சத்தீஸ்கரின் மகாசமுண்ட் மாவட்டத்தில் 400 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக இரண்டு சிறுவர்கள் உள்பட ஏழு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

chhattisgarh-two-minors-among-7-held-with-cannabis-worth-rs-40-lakhs
chhattisgarh-two-minors-among-7-held-with-cannabis-worth-rs-40-lakhs

இது குறித்து காவல் காண்காணிப்பாளர் ப்ரஃபுல் தாகூர் பேசுகையில், ''400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏழு பேர் கைது செய்யப்பட்டு, சம்மந்தப்பட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ. 40 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட அனைவரும் நண்பர்கள். இவர்களின் தலைவன் சந்தோஷ் டாரா. அவரும் ஏற்கனவே ஒடிஸாவில் ரிலையன்ஸ் ட்ரக்கை கடத்தியபோது, 300 கிலோ கஞ்சாவோடு கைது செய்யப்பட்டார்.

கோராபுட், சித்ரகொண்டா மற்றும் மல்கன்கிரி ஆகிய மூன்று மாவட்டங்களில் கடத்தல்காரர்கள் பயணிக்க பயன்படுத்திய 10 வழிகள் குறித்து காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைக் கொண்டு தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம்'' என தெரிவித்தார்.

இதையும் படிங்க:மணிப்பூர் அரசியல் புதிருக்கு விடை கிடைக்குமா!

ABOUT THE AUTHOR

...view details