இந்தியாவில் சுதந்திரம் கிடைத்து 70 ஆண்டுகளைக் கடந்து, பல்வேறு தொழில்நுட்ப வளர்ச்சியை எட்டியும், விண்வெளியில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியிருந்தாலும் இன்னும்கூட பல ஏழை எளிய, சிறுபான்மையின மக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லாதப் பல பகுதிகள் இந்தியாவில் பல உண்டு.
அதற்கு எடுத்துக்காட்டாக விளங்குவது, சத்தீஸ்கர் மாநிலத்தில் ஜகதல்பூர் மாவட்டத்தில் உள்ள புஸ்பல் கிராமம் தான். சத்தீஸ்கரில் கிராம மக்கள் பலரும் மிகவும் மோசமான வாழ்க்கை தரத்தில்தான், இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
புஸ்பல் கிராம மக்களுக்கு குடிப்பதற்கு, குடிநீருக்கான நீர் நிலைகள் என எந்த மூலக்கூறுமின்றி மிகவும் தவித்து வருகின்றனர். மேலும் குழாய் தண்ணீர், மின்சாரம், கழிவறைகள் ஆகிய அடிப்படை வசதிகள், இங்குள்ள பெருவாரியான கிராமவாசிகளுக்குக் கேள்விகுறியாகவே இருந்து வருகிறது.
இதனால், அந்தக் கிராமத்தில் ஒரு பகுதியில் உள்ள பெரிய குழியில் தேங்கியுள்ள அசுத்தமான நீரை சமையலுக்கும் மற்ற நீர் தேவைகளுக்கும் பயன்படுத்தி வருவதாக அம்மக்கள் கூறுகின்றனர்.