தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 13, 2020, 7:59 AM IST

ETV Bharat / bharat

கரோனா ஊரடங்கில் 23 பெண்களுக்கு பிரசவம் பார்த்த செவிலியருக்கு குவியும் பாராட்டுகள்

பிலாஸ்பூர்: சர்குஜா மாவட்டதில் சுகாதார நிலையத்தில் துணை செவிலியர் ஒருவர் ஊரடங்கு தொடங்கிய நாளில் இருந்து இதுவரை 23 பிரசவங்களை வெற்றிகரமாக செய்துள்ளார்.

chhattisgarh-anm-nurse-completes-23-successful-deliveries-amid-lockdown
chhattisgarh-anm-nurse-completes-23-successful-deliveries-amid-lockdown

சத்தீஸ்கர் மாநிலம், சர்குஜா மாவட்டத்தில் உள்ள அம்பிகாபூர் பகுதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் துணை செவிலியராக பணிபுரியும் ரஜினி குஷ்வாஹா, கரோனா ஊரடங்கு காலத்தில் கர்ப்பிணி பெண்கள் 23 பேருக்கு சுகப்பிரசவம் பார்த்துள்ளார். இது அப்பகுதியினரிடையே பெரும் பாராட்டுதலைப் பெற்றுள்ளது.

இதுகுறித்து ரஜினி குஷ்வாஹா ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில், "நான் பார்க்கும் வேலை எனக்கு மிகவும் மனநிறைவை தருகிறது. மற்ற சுகாதார மருத்துவ நிலையங்கள் இருந்தாலும் கர்ப்பிணி பெண்கள் என்னைத் தேடிவருவது மகிழ்ச்சி அளிக்கிறது" எனத் தெரிவித்தார்.

அம்பிகாபூர் பகுதியில் பெண்களுக்கு கரோனா குறித்த விழிப்புணர்வையும் ரஜினி ஏற்படுத்தி வருகிறார்.

இதையும் படிங்க:இந்தியாவில் கரோனா தாக்கம் உச்சத்தை தொடுமா ? - பதிலளிக்கிறார் துணைவேந்தர் சுதா சேஷய்யன்

ABOUT THE AUTHOR

...view details