தமிழ்நாடு

tamil nadu

நக்சலைட்டுகளை எதிர்த்து தேசியக்கொடி ஏற்றிய மக்கள்!

By

Published : Aug 16, 2019, 11:08 AM IST

ராய்பூர்: நக்சலைட்டுகளின் எதிர்ப்பையும் மீறி சத்தீஸ்கரில் உள்ள புத்த பார்டா கிராம மக்கள் தேசியக்கொடி ஏற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.

Flag

73ஆவது சுகந்திர தினம் நேற்று நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. பல்வேறு பகுதிகளில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. ஆனால், சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்தகாவுன் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் தேசியக்கொடி ஏற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

நக்சலைட்டுகளை எதிர்த்து தேசியக்கொடி ஏற்றிய மக்கள்!

இதனை எதிர்த்து புத்த பார்டா கிராமத்தில் வாழும் மக்கள், தேசியக்கொடி ஏற்றியுள்ளனர். இது குறித்து காவல் துறை தரப்பில், "தேசியக்கொடி ஏற்றுவதை எதிர்த்து நக்சலைட்டுகள் எச்சரிக்கைவிடுத்தனர். ஆனால், புத்த பார்டா கிராமத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கிராம மக்கள் அஞ்சாமல் தேசியக்கொடி ஏற்றினர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details