தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 25, 2020, 4:59 AM IST

ETV Bharat / bharat

கரோனா மரணங்களில் குழப்பத்தை ஏற்படுத்தும் மத்திய அரசு

எந்த ஒரு தேசிய சிக்கலையும் தீர்க்கும்போது, அரசானது அதுகுறித்த நம்பத்தகுந்த தகவல்களுடன் தயாராக இருக்க வேண்டும். எதிர்பாரதவிதமாக பெருந்தொற்று 53 லட்சம் பேருக்கு பரவியிருக்கிறது, அதனால் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்பது குறித்த மத்திய அரசின் முக்கியமான உண்மை தகவல்களில் குறைபாடு ஏற்பட்டுள்ளது.

COVID warriors
COVID warriors

மக்களுக்கு உண்மைகளைத் தெரியப்படுத்துங்கள் நாடு பாதுகாப்பாக இருக்கும் என்று அமெரிக்காவின் 16வதுஅதிபர் அபிரகாம் லிங்கன் கூறியவை. இவை வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமையும் தேவை என்பதை எதிரொலிக்கும் வார்த்தைகளாகும். மிகவும் முக்கியமாக, மக்களுக்கு தகவல் அறியும் உரிமை இருக்கிறது என்பதை வலியுறுத்துகிறது.

எந்த ஒரு தேசிய சிக்கலையும் தீர்க்கும்போது, அரசானது அதுகுறித்த நம்பத்தகுந்த தகவல்களுடன் தயாராக இருக்க வேண்டும். எதிர்பாரதவிதமாக பெருந்தொற்று 53 லட்சம் பேருக்கு பரவியிருக்கிறது, அதனால் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்பது குறித்த மத்திய அரசின் முக்கியமான உண்மை தகவல்களில் குறைபாடு ஏற்பட்டுள்ளது. முன்கூட்டியே முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் 29 லட்சம் பேரின் உயிர் பாதுகாக்கப்பட்டதாக மத்திய அரசு பிரகடனப்படுத்தியது.

இந்த கரோனா தடுப்புப் பணியின்போது எத்தனை முன் களப்பணியாளர்கள் உயிர் தியாகம் செய்தனர் என்ற தகவல் ஆவணம் மத்திய அரசிடம் இல்லை. எனினும், தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பல நூறு கி.மீ-கள் நடந்து சென்ற புலம் பெயர் தொழிலாளர்கள் பற்றிய தகவல்களும் அரசிடம் இல்லை. இதில் இன்னும் மேலும், அவசரமான பொது முடக்கத்தின் பலனாக சிறிய, நடுத்தர நிறுவனங்களில் பணியாற்றிய எண்ணற்ற ஊழியர்கள் குறித்தும் மத்திய அரசுக்கு ஒன்றும் தெரியாது. எந்த ஒரு புள்ளிவிவரமும் எண்ணிக்கையும் இல்லாமல், பொது ஊரடங்கு தொடங்கியது முதல் அதிகார இயந்திரம் என்ன செய்து கொண்டிருக்கிறது?

கோவிட்-19 பெருந்தொற்று தொடங்கியபோது, மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவல்துறையினர் மற்றும் சுகாதாரப்பணியாளர்கள் ஆகியோரின் பொறுப்புடைமையை ஒட்டுமொத்த நாடும் வெளிப்படுத்த வேண்டும் பிரதமர் மோடி நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டார். எனினும், கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களை கவுரவிக்கும் வகையில் பூங்கொத்துகளை மருத்துவமனைகளில் தூவும் மத்திய அரசின் முயற்சியை நாட்டின் மக்கள் வரவேற்றனர்.

கரோனா தடுப்பின்போது உயிர்தியாகம் செய்தவர்களுக்கு சுகாதார காப்பீடு அளிக்கும் ஏற்பாட்டை பாராட்டினோம். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது இந்த கொடூர நோயால் தாக்கப்பட்டு நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் உயிரிழந்திருக்கின்றனர் என்று அறியப்படும் செய்தி நெகிழ வைப்பதாக இருக்கிறது. இதுபோன்ற சுகாதார பணியில் ஈடுபட்டு உயிரிழந்த தியாகிகள் குறித்த தகவல்கள் கேட்கப்பட்டபோது, அதுபோன்ற தகவல்கள் இல்லை என்று அரசு சொல்கிறது. கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் உதவி கேட்டு பதிவு செய்தவர்கள் விவரங்கள் மட்டுமே இருப்பதாக அரசு சொல்லி இருக்கிறது.

ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் இந்திய மெடிக்கல் அசோஷியேசன் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் 196 மருத்துவர்கள் மரணம் அடைந்தது தொடர்பாக விரிவாக தெரிவிக்கிறது. ஆனால், பிரதமர் அலுலவகத்தில் இருந்து இதற்கு எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை. இதற்கிடையே இந்த உயிரிழப்பு 382 ஆக அதிகரித்தது. ஐஎம்ஏ-வின் புள்ளி விவரத்தின்படி கரோனா தாக்கி உயிரிழந்த மருத்துவர்களில் 15 சதவிகிதம் பேர் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றியவர்கள் என்றும் 8 சதவிகிதம் பேர் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றியவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்95 முகக்கவசங்கள், கையுறைகள் ஆகியவைதான் மருத்துவர்களுக்கான தனிதபர் பாதுகாப்பு முறைகளாக இருந்தது என்று மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் உறுதி செய்கின்றன. உயிரிழந்தவர்களில் கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களில் 40 சதவிகிதம்பேர் அடக்கம் என்று ஐஎம்ஏ தோராயமாகத் தெரிவிக்கிறது.

கரோனாவால் பாதிக்கப்பட்ட 2,238 அலோபதி மருத்துவர்களில் 382 பேர் உயிரிழந்துள்ளனர். இது தேசிய உயிரிழப்பு விகிதமான 1.7 சதவிகிதத்தை விடவும் மருத்துவர்கள் உயிரிழப்பு பத்து மடங்கு அதிகம் அதாவது 17.06 சதவிகிதமாக இருக்கிறது. உயிரிழந்த பெரும்பாலான மருத்துபவர்கள் மிகவும் அனுபவம் பெற்ற பொது மருத்துவர்கள் என்று ஐஎம்ஏ புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கோரானா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சில மருத்துவர்கள் 35-க்கு உட்பட்ட இளைஞர்களாவர். கர்நாடகா மாநிலத்தில் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, அங்கு மருத்துவப்படிப்பில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் கோவிட்-19 பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். சுகாதார முன்களப்பணியாளர்களின் தியாகத்தை அங்கீகரித்து கவுரவிப்பதற்கு பதில் அரசானது உண்மைகளை புறக்கணிக்கிறது.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் சுகாதாரப்பணியாளர்கள் 7,000 பேர் உயிரிழந்திருப்பதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்திருக்கிறது. இதில் இந்தியாவில் இருந்து மட்டும் 573 பேர் உயிரிழந்திருக்கின்றனர். பல்வேறு தனிப்பட்ட அமைப்புகள் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு புள்ளிவிவரங்களை ஒப்பிட்டு சரிபார்க்கின்றன. நலத்திட்டங்களை செயல்படுத்த நியமிக்கப்பட்ட மத்திய அமைச்சகங்கள் இதையெல்லாம் செய்கின்றனவா?

இந்தியா மட்டுமே முழுமையான பொது ஊரடங்கை அமல்படுத்தியது. உலக வங்கி அறிக்கையில் கூறப்பட்ட தகவலின்படி மார்ச் 24-ம் தேதி தேசிய அளவிலான முழு ஊரடங்கு தொடங்கியதால் மாநிலங்களில் இருந்த 4 கோடி புலம் பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சகம், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் எண்ணிக்கை எவ்வளவு என்பது குறித்து உணர்ந்திருக்கவில்லை என்பது அரசுக்கு விருப்பம் இல்லாத ஒன்றைப்பற்றி தெரிந்து கொள்ளத் தேவையில்லை என்பது போல இருக்கிறது.

புள்ளிவிவரம் இல்லாதபோது எதுவாக இருந்தாலும் எந்த உதவியும் அளிக்கப்படவில்லை. 63 லட்சம் தொழிலாளர்கள் 4,611 சிறப்பு ரயில்களில் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பினர். ஆனால், அவர்களின் இறப்பு நிலைக்கு அரசு செவிசாய்க்கவில்லை. கோடிக்கணக்கான தினக்கூலித் தொழிலாளிகள் முழு ஊரடங்கின் துயரநிலை காரணமாக பாதிக்கப்பட்டது குறித்து கவலைப்படவோ மத்திய அரசு மீண்டும் திரும்பிப்பார்க்கவோ கூட இல்லை.

குறு,சிறு, நடுத்தர தொழில்நிறுவனங்கள் தேசிய பொருளாதாரத்தின் உயிர் நாடியாகும். ஆனால், பெருந்தொற்று காரணமாக இந்த தொழில்கள் முடங்கின. லட்சகணக்கான ஊழியர்கள் வேலை இழந்தனர். இவர்களின் வாழ்வாதார இழப்பு குறித்து எந்த ஒரு சர்வேயும் நடத்தப்படவில்லை என்று மத்திய அரசு கவுரவமாக அறிவித்துள்ளது.

ஆத்ம நிர்பார் பாரத் அபியான் என்ற முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்தில் இருந்து ஊழியர்கள் ஒன்றும் பயன்பெறவில்லை. கோவிட் தாக்கத்துக்குப் பின்னர் இயல்புநிலை திரும்ப, இந்த வகையான எளிதான அணுகுமுறையை அகற்ற வேண்டும். சமூக பொருளாதார குழப்பத்தின் தோற்றத்தை அறிய மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆதரவு அளிப்பதற்கான சரியான தீர்வுகளை கண்டுபிடிக்க மத்திய அரசிடம் தெளிவான புள்ளி விவரங்கள் மற்றும் உண்மைகள் இருக்க வேண்டும். ஆனால், அப்போது அரசாங்கத்தின் கடமைகளை அதற்கு நினைவூட்ட வேண்டுமா?

ABOUT THE AUTHOR

...view details