தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜுகி குடியிருப்பு விவகாரத்தில் விரைவில் முடிவு...! - மத்திய அரசு - ரயில்வே, நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம்

டெல்லி: அரசுக்குச் சொந்தமான 70 கி.மீ. நீளமுள்ள ரயில்வே தடங்களின் அருகே  கட்டப்பட்ட குடியிருப்புகள் இடிக்கப்படுவது தொடர்பாக ரயில்வே, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து விரைவில் முடிவெடுக்கும் என்றும் அதுவரை எந்தக் குடியிருப்புப் பகுதியும் அகற்றப்படாது என்றும் உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு பதிலளித்துள்ளது.

ஜுகி குடியிருப்பு விவகாரம்: விரைவில் முடிவெடுக்கப்படும்- மத்திய அரசு
ஜுகி குடியிருப்பு விவகாரம்: விரைவில் முடிவெடுக்கப்படும்- மத்திய அரசு

By

Published : Sep 14, 2020, 5:28 PM IST

ரயில்வே, நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் டெல்லி அரசு ஒன்றாக கலந்தாலோசித்து நான்கு வாரங்களில் தீர்வு காணும் என்றும் அதுவரை ரயில் தடங்களின் அருகே கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை இடிக்க மாட்டோம் என்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வுமுன் சமர்ப்பித்தார்.

பாதிக்கப்பட்டுள்ள ஜுகி குடியிருப்பாளர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சல்மான் குர்ஷித், தங்களை இந்த வழக்கில் ஒரு தரப்பினராக நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இறுதி முடிவு எடுக்காதவரை குடியிருப்புகள் இடிக்கப்படாது என்று மத்திய அரசு கூறிவரும் நிலையில், சில பகுதிகளில் குடியிருப்பை இடிக்கும் சம்பவம் நடந்திருப்பதாக சிங்வி வாதிட்டார், எனவே அதைத் தடுக்க நீதிமன்றம் அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதுபோன்ற இடிப்புகள் வேறு சில விஷயங்களால் நடந்திருக்கலாம், ஆனால் இந்த விஷயத்தில் அல்ல என்று மேத்தா பதிலளித்தார். புனர்வாழ்விற்கான நடைமுறையில் உள்ள சட்டங்கள் மற்றும் விதிகள் தொடர்பாக அரசாங்கம் முழுமையாக ஒத்துழைக்கும் என்று டெல்லி அரசாங்க ஆலோசகர் நீதிமன்றத்தில் வாதிட்டார். நான்கு வாரங்களுக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தை பட்டியலிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜய் மக்கன், டெல்லியில் உள்ள ரயில் பாதைகளில் கிட்டத்தட்ட 48 ஆயிரம் ஜுகிகளை அகற்ற உத்தரவிட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடினார்.

ஆகஸ்ட் 31ஆம் தேதி, டெல்லியில் ரயில் தடங்கள் அருகே அமைந்துள்ள சுமார் 48 ஆயிரம் குடியிருப்புகளை மூன்று மாதங்களுக்குள் நீக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது, இந்த விவகாரத்தில் எந்த அரசியல் தலையீடும் ஏற்படாது என்றும் கூறியது.

ABOUT THE AUTHOR

...view details