சில நாட்களாக மத்திய அரசின் ஓய்வூதியத்தில் 20 விழுக்காடு குறைக்க நிதி அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி பரவலாக பேசப்பட்டன. இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம். மத்திய அரசின் ஓய்வூதியம் குறைக்க திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்தி தவறானது. மத்திய அரசின் பண நடவடிக்கைகளால் ஓய்வூதியம் குறைப்பு இருக்காது என தெரிவித்தது.
மத்திய அரசு வழங்கும் ஓய்வூதியத்தை குறைக்கும் திட்டம் இல்லை - நிதியமைச்சகம் விளக்கம் - business news
டெல்லி: மத்திய அரசு வழங்கும் ஓய்வூதியத்தில் 20 விழுக்காடு குறைப்படும் என சமூக ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறானவை என மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

centre-denies-claims-on-pensio
நிதி அமைச்சகத்தின் அந்த ட்வீட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் இன்று பகிர்ந்து கொண்டார். அதில், "மத்திய அரசின் ஓய்வூதியத்தை பற்றிய தெளிவுபடுத்தலுக்கு சமூக வலைதளங்களில் தவறாக வெளியான செய்திகளுக்கு நன்றி. ஓய்வூதியத்தில் குறைப்பு இல்லை" என ட்வீட் செய்துள்ளார்.
இதையும் படிங்க:ஆதரவற்றோருக்கு தலா ஆயிரம் ரூபாய் - உ.பி., அரசு அறிவிப்பு