நாட்டில் உள்ள எளிய மக்களுக்கு உணவு தானிய விநியோகத்தை உறுதி செய்யும் விதமாக அந்தியோத்தயா அன்ன யோஜ்னா செயல்பட்டுவருகிறது. உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இந்த திட்டம் செயல்படும் நிலையில், இந்தத் திட்டத்தில் பார்வை திறனற்றவர்களையும் சேர்க்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.
இதையடுத்து பார்வை திறனற்றவர்களை இந்தத் திட்டத்தில் சேர்த்து அவர்களுக்கு 35 கிலோ மானிய உணவு தானியம் வழங்க வேண்டும் என மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.