டெல்லியில் நேற்று மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர்மட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில், மத்திய அரசு கடந்த ஆண்டு உத்தரப் பிரதேசம், கர்நாடகா, அஸ்ஸாம் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் பல்வேறு பேரழிவுகளால் ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணமாக ரூ.5,908.56 கோடியை வழங்க ஒப்புதல் அளித்தது.
அதில், அஸ்ஸாமுக்கு ரூ.616.63 கோடி, இமாச்சலப் பிரதேசத்திற்கு ரூ.284.93 கோடி, கர்நாடகாவிற்கு ரூ.1869.85 கோடி, மத்தியப் பிரதேசத்திற்கு ரூ.1749.73 கோடி, மகாராஷ்டிராவுக்கு ரூ.956.93 கோடி, திரிபுராவுக்கு ரூ.63.32, உத்தரப் பிரதேசத்திற்கு ரூ.367.17 கோடி ஒதுக்கீடு செய்ய முடிவுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.