தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா தடுப்புப் பணிகள் போதாது - கிரண் பேடியிடம் மத்தியக்குழு அதிருப்தி - மத்திய குழு

புதுச்சேரி: கரோனாவைக் கட்டுப்படுத்த வீடு வீடாகச் சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனப் புதுச்சேரி அரசுக்கு மத்தியக்குழு அறிவுறுத்தியுள்ளது.

team
team

By

Published : Aug 28, 2020, 10:55 AM IST

புதுச்சேரி மாநிலத்தில் அதிகரித்துவரும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்குவதற்காகவும், தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வு மேற்கொள்வதற்காகவும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் சென்னை தேசிய தொற்று நோயியல் நிலைய இயக்குநர் மனோஜ் மர்க்கேகர், அறிவியலாளர்கள் கணேஷ்குமார், நேஷன், மருத்துவர்கள் அடங்கிய குழு புதுச்சேரி வந்தது.

இக்குழுவினர் கடந்த இரண்டு நாள்களாக கரோனா சிகிச்சை மருத்துவமனைகள், கட்டுப்பாட்டு மையங்களில் 7 நிலைகளில் ஆய்வுசெய்தனர். அதைத் தொடர்ந்து துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை சந்தித்த மத்தியக்குழுவினர் கரோனா பணிகள் குறித்த அறிக்கையை அளித்துள்ளனர். அதில், தடுப்புப் பணிகளில் உள்ள பல்வேறு குறைகளை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறிப்பாக, “புதுச்சேரியில் நாள்தோறும் 1,200 கரோனா கண்டறிதல் பரிசோதனைகளே செய்யப்படுகின்றன. தொற்றை விரைவாகக் கண்டறிய தினமும் 3,000 பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். சில ஆய்வகங்களில் பரிசோதனை முடிவுகள் தேங்கி கிடக்கின்றன. பள்ளி போன்ற பொது இடங்களில் நடமாடும் மருத்துவக்குழுவை அமர்த்த வேண்டும்.

கரோனா தடுப்புப் பணிகள் போதாது - மத்தியக்குழு அதிருப்தி

தற்போது புதுச்சேரியில் 50 விழுக்காடு தொற்று பாதித்தவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையை குறைத்து, கோவிட் கேர் மையங்களில் அவர்களைத் தனிமைப்படுத்த வேண்டும். தற்போது 12 மொபைல் குழுக்கள் மட்டுமே உள்ளன. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களை தொலைபேசி வாயிலாக கண்காணிக்க குழு ஏற்படுத்த வேண்டும்.

கரோனாவைக் கட்டுப்படுத்த இப்போதுள்ள பணிகள் போதாது. அதிக பாதிப்பு உள்ள பகுதிகளைக் கண்டறிந்து, அங்கு வீடு வீடாகச் சென்று சோதனை மேற்கொள்ள வேண்டும். அப்பகுதிகளில் அதிகமான மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் 597 மருத்துவ முகாம்கள்: 23 ஆயிரம் பேருக்கு பரிசோதனை!

ABOUT THE AUTHOR

...view details