தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 27, 2020, 5:41 PM IST

Updated : Apr 27, 2020, 6:04 PM IST

ETV Bharat / bharat

ரேபிட் டெஸ்ட் கருவிகளை உடனடியாக திருப்பி அனுப்புங்கள் - மத்திய அரசு

டெல்லி: சீனாவிலிருந்து வாங்கிய அனைத்து ரேபிட் டெஸ்ட் கருவிகளையும் உடனடியாக திருப்பி அனுப்புமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

test kits
test kits

கரோனா பாதிப்பு பரிசோதனைக்காக அண்மையில் சீனாவிலிருந்து லட்சக்கணக்கான ரேபிட் டெஸ்ட் கருவிகளை பல மாநில அரசுகள் கொள்முதல் செய்துள்ளன. கரோனா அதிகம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் மக்களை விரைவாக பரிசோதித்து முடிவுகளை கண்டறிய இந்த ரேபிட் டெஸ்ட் கருவிகள் பயன்படுகின்றன.

இந்த கருவிகள் சரியாக இயங்கவில்லை எனக் குற்றாச்சாட்டுகள் ஆங்காங்கே எழுந்த நிலையில், ஐ.சி.எம்.ஆர் பரிசோதனை சான்று வழங்கும் வரை கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஐ.சி.எம்.ஆர் உத்தரவு

இந்நிலையில், சீனாவிலிருந்து வாங்கிய அனைத்து ரேபிட் டெஸ்ட் கருவிகளையும் உடனடியாக திருப்பி அனுப்புமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.அந்த நிறுவனங்களிடம் வாங்கிய கருவிகள் அனைத்தும் முறையாக இயங்கவில்லை. மாறுபட்ட முடிவுகளை தருவதாக ஐ.சி.எம்.ஆர் அமைப்பு கூறியதையடுத்து மத்திய அரசு இந்த உத்தரவை விடுத்துள்ளது.

இதையும் படிங்க:கரோனா அச்சுறுத்தல்: கர்நாடகாவை பாராட்டிய பிரிட்டன் அமைச்சர்

Last Updated : Apr 27, 2020, 6:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details