தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் நான்கு வழிச்சாலைகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் - நாராயணசாமி - புதுச்சேரி

புதுச்சேரி: மாநகரில் பல மேம்பாலங்கள் உள்ளடக்கிய நான்குவழிச் சாலைகள் அமைக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

By

Published : Mar 1, 2020, 2:14 PM IST

புதுச்சேரி மாநகரில் பல மேம்பாலங்கள் உள்ளடக்கிய நான்கு வழிச்சாலைகள் அமைக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது என்றும், இந்தச் சாலை மேம்பாடு பல 130 கோடி ரூபாய் செலவில் உருவாகிறது என்றும் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்தியப் பொருளாதாரம் மிக மோசமாக உள்ளதற்கு காரணம் உள்நாட்டு குழப்பம். பெரும்பாலான நிறுவனங்கள் உற்பத்தியைக் குறைத்துள்ளன. இதனால் பொருளாதாரம் சீர்கெட்டுள்ளது.

இதை திசைதிருப்பத்தான் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவை நம் நாட்டில் இயற்றப்பட்டுள்ளது. இதனால் பல மாநிலங்களில் கலவரம் ஏற்பட்டுள்ளது. தற்போது டெல்லியில் ப‌ல்வேறு இட‌ங்க‌ளி‌ல் வன்முறையும் ஏற்பட்டுள்ளது. இதனை மத்திய அரசு தடுக்காமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டுள்ளது கண்டனத்துக்குரியதாகும்” எனக் கூறினார்.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

மேலும் அவர், "புதுச்சேரியில் நேற்று நெடுஞ்சாலைக‌ளை அகலப்படுத்துதல், விரிவுப்படுத்துதல் குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியுடன் பேசப்பட்டது.

இதில், புதுச்சேரியில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை விரிவாக்கம் செய்வது குறித்து நான்கு ஒப்பந்தங்கள் பற்றி விரிவாகப் பேசப்பட்டது. இந்தச் சாலை மேம்பாடு 130 கோடி ரூபாய் செலவில் உருவாகிறது" எனத் தெரிவித்தார்.

இதையும் பார்க்க: ஆதரவற்ற உயிரினங்களுக்கு தன் வீட்டையளித்த சாஃப்ட்வேர் இஞ்சினீயர்!

ABOUT THE AUTHOR

...view details