மத்திய சிறுகுறு நிறுவனங்களுக்கான அமைச்சர் நிதின் கட்கரி கட்டுமான கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், சந்தையின் தற்போதைய தன்மையை வைத்து சிமென்ட் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் சுயலாபத்திற்காக, சந்தையை துஷ்பிரயோகம் செய்கின்றன எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாட்டின் தேவைக்கு ஏற்ப தொழிற்சாலைகள் செயல்படவில்லை எனக் கூறிய அவர், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு சுமார் ரூ.111 லட்சம் கோடி மதிப்புள்ள உட்கட்டமைப்பு திட்டப்பணிகள் நாட்டில் நடைபெறவுள்ளன என்றார்.