ஜார்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் 22 நாட்களே உள்ள நிலையில், காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் நேற்று நடந்தது. இதில் காங்கிரஸ் வேட்பாளர்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் ஜார்க்கண்ட் காங்கிரஸ் பொறுப்பாளர் ஆர்.பி.என். சிங், மாநிலத் தலைவர் ராமேஷ்வர் ஓரான், எதிர்கட்சித் தலைவர் ஆலம்கீர் ஆலம் மற்றும் கூடுதல் பொறுப்பாளர் மெயினுல் ஹாகு உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இதுதொடர்பாக பேசிய ஜார்கண்ட் மாநில பொறுப்பாளர் ஆர்.பி.என். சிங், “பாரதிய ஜனதா யாருடன் கூட்டணி வைத்துள்ளது, யாரை கூட்டணிக்கு அழைப்பது என்று அக்கட்சிக்கே தெரியாது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் இளைஞர்கள், பெண்களுக்கு வாய்ப்பு வழங்கவுள்ளது” என்றார்.