தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

லடாக் நிலவரம் குறித்து ராஜ்நாத் சிங்கிடம் ராவத் பேச்சு! - சீனா, பூடான், இந்தியா

டெல்லி: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், முப்படைகளின் முதல் தலைமை தளபதி பிபின் ராவத் கிழக்கு லடாக் நிலவரம் தொடர்பாக இன்று (திங்கள்கிழமை) சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பின்போது முப்படை தலைமை தளபதிகளும் உடனிருந்தனர்.

Rajnath Singh  General Bipin Rawat  Ladakh news  Doklam  லடாக் விவகாரம்  ராஜ்நாத் சிங், பிபின்ராவத் சந்திப்பு  2017 டோக்லாம் மோதல்  சீனா, பூடான், இந்தியா  இந்தியா- சீனா மோதல்
Rajnath Singh General Bipin Rawat Ladakh news Doklam லடாக் விவகாரம் ராஜ்நாத் சிங், பிபின்ராவத் சந்திப்பு 2017 டோக்லாம் மோதல் சீனா, பூடான், இந்தியா இந்தியா- சீனா மோதல்

By

Published : Jun 8, 2020, 7:07 PM IST

கிழக்கு லடாக்கிலுள்ள இந்தியப் பகுதிகளில் முகாம்கள் அமைப்பதன் மூலம், அப்பகுதிகளின் நிலைமையை மாற்றலாம் என சீனா நினைக்கிறது. இந்நிலையில், கடந்த 5ஆம் தேதி லடாக் பாங்காங் ஏரிக்கரையில் இந்திய- சீன வீரர்கள் மோதிக்கொண்டனர்.

இதில் இருநாட்டு வீரர்களும் காயமுற்றனர். இந்தப் பகுதிகளில் பதற்றம் தொடர்ந்து நிலவிவருகிறது. இரு நாட்டு படைகளும் குவிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து இருநாட்டு ராணுவ பிரதிநிதிகளும் சனிக்கிழமை (ஜூன்6) சந்தித்துக் கொண்டனர். இந்திய ராணுவ குழுவுக்கு லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் தலைமை தாங்கினார். சீன பிரதிநிதியாக தெற்கு சின்ஜியாங் ராணுவ பிராந்திய தளபதி மேஜர் ஜெனரல் லியு லின் தலைமை தாங்கினார்.

இதையடுத்து இந்திய வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை7) வெளியிட்ட அறிக்கையில், லடாக்கில் நிலவும் சூழ்நிலையை 'அமைதியாக தீர்க்க' இந்தியாவும் சீனாவும் ஒப்புக் கொண்டதாக தெரிவித்திருந்தது.

அந்த அறிக்கையில், “இருதரப்பு உடன்படிக்கைகளின்படி எல்லைப் பகுதிகளின் நிலைமையை அமைதியாகத் தீர்ப்பதற்கும் இருதரப்பு உறவுகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் இந்தியா-சீனா எல்லைப் பிராந்தியங்களில் அமைதி அவசியம் என்று தலைவர்களுக்கிடையே உடன்பாடு எட்டப்பட்டது” என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் முப்படைகளின் முதல் ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை இன்று சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பின்போது முப்படை தலைமை தளபதிகளும் உடனிருந்தனர்.

அப்போது, “கிழக்கு லடாக்கில் நிலவும் சூழல் மற்றும் பாதுகாப்பு குறித்து பிபின் ராவத், ராஜ்நாத் சிங்கிடம் எடுத்துரைத்தார். மேலும், பாதுகாப்பு ஒப்பந்தங்கள் குறித்து மறுமதீப்பிடு செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

லடாக் பகுதியில் இந்தியாவின் சாலை கட்டுமானப் பணிக்கு சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. மேலும் சீன ராணுவம் அப்பகுதியில் தொடர்ந்து ரோந்து சுற்றிவருகிறது. இது வழக்கமான நிகழ்வாக இல்லை. இந்தியாவும் பாதுகாப்பை அதிகரித்துள்ளது.

முன்னதாக, கடந்த 2ஆம் தேதி இந்திய-சீன அலுவலர்கள் இடையே ஒரு உரையாடல் நடந்தது. அதில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.

2017ஆம் ஆண்டில் டோக்லாமில் இந்திய-சீன வீரர்கள் மோதிக்கொண்டனர். டோக்லாம், இந்தியா-பூடான்-சீனா ஆகிய மூன்று நாடுகளை இணைக்கும் ஒரு பகுதி. இதில் பூட்டானுக்கு சொந்தமான டோக்லாம் பகுதியை கைப்பற்ற சீனா மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.

இந்தியா-சீன ராணுவ வீரர்கள் இடையே நடந்த இந்தப் பிரச்னை 73 நாள்கள் நீடித்தது. அப்போதும் இந்திய- சீன வீரர்கள் கைகலப்பில் ஈடுபட்டனர். இறுதியாக சீன வீரர்கள் டோக்லாமில் சாலை அமைக்கும் பணியை கைவிட்டனர் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க: இந்தியா-சீனா இடையேயான முக்கிய மோதல்களின் வரலாறு

ABOUT THE AUTHOR

...view details