தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிபிஎஸ்இ பாடத்திட்ட சர்ச்சை:'கல்வியை அரசியல் ஆக்காதீர்கள்' - ரமேஷ் பொக்ரியால்

டெல்லி: குழந்தைகளுக்குக் கல்வி கற்பிப்பது புனிதமானது எனவும்; கல்வியிலிருந்து அரசியலை விலக்கி வைப்போம் எனவும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

By

Published : Jul 10, 2020, 8:26 AM IST

CBSE  CBSE syllabus controversy  Ramesh Pokhriyal  சிபிஎஸ்இ பாடத்திட்ட சர்ச்சை  ரமேஷ் பொக்ரிவால்  மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்  கரோனா பெருந்தொற்று
'கல்வியை அரசியலாக்காதீர்கள்'- ரமேஷ் பொக்ரியால்

கரோனா பெருந்தொற்றால் பள்ளிகள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளன. இதனால், இந்த கல்வியாண்டில் மாணவர்களின் பாடச்சுமைக் குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30 விழுக்காடு குறைக்கப்பட்டது. அதில், உள்ளாட்சி, குடியுரிமை, பன்மைத்துவம், மதச்சார்பின்மை உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் இருந்த பாடத்திட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன.

இதற்கு அரசியல் கட்சியினர், கல்வியாளர்கள் உட்பட பலர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். ஆளும் பாஜக அரசு, ஒரு குறிப்பிட்ட கருத்தியலை மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்லப்பார்க்கிறது என குற்றஞ்சாட்டப்பட்டது. பாஜகவின் இந்தச் செயல் பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் பாடத்திட்டம் நீக்கப்பட்ட விவகாரம் தவறானதாக திரிக்கப்பட்டுவிட்டது என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் சுமையைக் குறைக்கவே 30 விழுக்காடு பாடம் குறைக்கப்பட்டதாக தெரிவித்த அவர், வல்லுநர்கள் குழு ஆலோசனையின் படியே பாடத்திட்டம் குறைக்கப்பட்டதாகவும் இதில், எவ்வித உள்நோக்கமும் இல்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், நமது குழந்தைகளுக்குக் கல்வி கற்பிப்பது புனிதமானது எனத் தெரிவித்த அவர், அரசியலை கல்வியிலிருந்து விலக்கி வைப்போம், கல்வி கற்றவர்கள் நிறைந்ததாக அரசியலை உருவாக்குவோம் எனவும் கூறினார்.

இதையும் படிங்க:கட்டை விரல்கள் கிடைக்காது சமயத்தில் கலைஞர் சொன்னது போல் பட்டை தான் உரியும் - உதயநிதி ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details