இந்தியா முழுவதும் கரோனா வைரசால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். இதனிடையே கேரளாவில் அதிகப்படியான பூனைகள் தொடர்ந்து இறப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் கேரளாவின் மனந்தவடி, மேப்படி பகுதிகளில் எலிகள் இறப்பு சதவிகிதம் அதிகமாக இருக்கிறது.
இதனால் சிலர் விலங்குகள் நலத் துறையினரிடம் புகாரளித்துள்ளனர். அவர்கள் இறந்த பூனைகளின் ரத்த மாதிரியை சோதனைக்கு எடுத்துச் சென்றனர். இது குறித்து விலங்குகளுக்கான சிறப்பு மருத்துவர் ராமச்சந்திரன் பேசுகையில், ''ஃபெலின் பர்வோ வைரஸ் என்னும் தொற்றால்தான் பூனைகள் தொடர்ந்து இறந்துள்ளன.