மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூர் மாவட்ட அரசுப்பள்ளி ஒன்றில் 12ஆம் வகுப்பு படித்த மாணவன் சுதீப் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), அங்குள்ள விடுதியில் தங்கி பள்ளிக்குச் சென்று வந்தார்.
மாணவன் தற்கொலை
இந்நிலையில், கடந்த 18ஆம் தேதி சுதீப் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
டைரியில் திடுக்கிடும் தகவல்கள்
இதையடுத்து, மாணவன் தற்கொலை செய்துகொண்ட விடுதி அறையில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு குறிப்பேடு ஒன்று கண்பிடிக்கப்பட்டது.
அதில், பல திடுக்கிடும் தகவல்கள் இருந்தைக் கண்டு காவல் துறையினர் அதிர்ச்சியடைந்தனர். அந்த டைரியில் சுதீப், "என்னை சக மாணவர்கள், விடுதி காப்பாளர், விடுதி காவலர் ஆகியோர் பாலியல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்திவருகின்றனர்.
நரக வேதனை
இந்த வேதனையை கடந்த ஓராண்டாக அனுபவித்துவருகிறேன். மேலும் இரவு முழுவதும் என்னை தூங்க விடாமல் பாலியல் வன்புணர்வு செய்துவருகின்றனர். இதனால் பல நாள்கள் தூங்காமல் பள்ளிக்குச் சென்று உறங்குகிறேன். என்னை இந்த நரகத்தில் விடுவிக்க யாரேனும் வராமாட்டார்களா?" என்று மிகுந்த மனவேதனையுடன் அதில் கூறியிருந்தார்.