மேற்கு வங்க மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பல்வேறு பகுதிகளிலும் பாஜக கட்சியினர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அதனைத்தொடர்ந்து புரட்சியாளர் பிர்சா முண்டாவின் சிலைக்கு மாலை அணிவித்து செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், '' நேற்று முன் இரவிலிருந்து நான் மேற்கு வங்கத்தில் தங்கியிருக்கிறேன். இங்கு வந்த நிமிடத்தில் இருந்து மக்களிடையே மம்தா பானர்ஜி மீது இருக்கும் கோபத்தை உணர முடிகிறது. இம்மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பெரும் மாற்றத்தை கொண்டு வரமுடியும் என நம்புகிறோம்.