தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உலகின் நம்பர் ஒன் பணக்காரர் இந்தியா வருகை! போராட்டத்தை அறிவித்த வர்த்தகர்கள் கூட்டமைப்பு... - ஜெப் பெசோஸ் இந்தியா வருகை

டெல்லி: அடுத்த மாதம் இந்தியா வரவுள்ள அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸின் வருகைக்கு எதிராக மிகப் பெரிய போராட்டத்தை நடத்துவுள்ளதாக அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

Amazon CEO Jeff Bezos
Amazon CEO Jeff Bezos

By

Published : Jan 12, 2020, 9:44 PM IST

அமேசான் நிறுவனத்தின் தலைவரும், உலகின் நம்பர் ஒன் பணக்காரருமான ஜெப் பெசோஸ் அடுத்த வாரம் இந்தியா வரவுள்ளார், இந்தப் பயணத்தின்போது அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார். இந்நிலையில், அவரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 300க்கும் மேற்பட்ட நகரங்களில் போராட்டம் நடத்தவுள்ளதாக அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜனவரி 15ஆம் தேதி இந்தியா வரவுள்ள ஜெப் பெசோஸுக்கு எதிராக மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும். இந்தப் போராட்டத்தில் அனைத்திந்திய மொபைல் சில்லறை விற்பனையாளர்கள் சங்கம், அகில இந்திய நுகர்வு பொருட்கள் விநியோகஸ்தர் கூட்டமைப்பு உட்பட ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட வர்த்தக கூட்டமைப்புகள் பங்கேற்கவுள்ளன.

இந்தப் போராட்டம் 300க்கும் மேற்பட்ட நகரங்களில் நடைபெறவுள்ளன. அமேசான் சிறு வர்த்தகர்களின் வளர்ச்சிக்கு உதவுவதாகத் தவறான தகவலை ஜெப் பெசோஸின் வருகை பரப்பும். அதைத் தடுக்கவே இந்தப் போராட்டத்தை நடத்தவுள்ளோம். சொல்லப்போனால் அமேசான் நிறுவனத்தால் லட்சக்கணக்கான சிறு வர்த்தகர்கள் நாசமடைந்துள்ளனர்.

பண்டிகை கால விற்பனை என்ற பெயரில் அமேசானும் ஃபிளிப்கார்ட்டும் அதிகப்படியான சலுகைகளை வழங்குகின்றன. இதனால் சிறு வர்த்தகர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இதுகுறித்து அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த வாரம், பிரதமர் நரேந்திர மோடி ஜெப் பெசோஸை சந்திக்கும் முன், அவர் வர்த்தகர்கள் கூட்டமைப்பு பிரதிநிதிகளைச் சந்திக்க வேண்டும் என்று அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நொடிகளில் சார்ஜ் ஏறும் மின்சார பேருந்து - அஷோக் லேலாண்ட் தயாரிக்கிறது!

ABOUT THE AUTHOR

...view details