தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

40 லட்சம் டெல்லி வாசிகளுக்கு மத்திய அரசின் தீபாவளி பரிசு! - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடெகர் செய்தியாளர் சந்திப்பு

டெல்லி: அங்கீகாரமில்லாத குடியிருப்புகளில் வசித்துவரும் 40 லட்சம் டெல்லி வாசிகளுக்கு பட்ட வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

prakash javdekar

By

Published : Oct 24, 2019, 2:26 AM IST

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடெகர் டெல்லியில் புதன்கிழமையன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "தீபாவளிக்குச் சிறிது நாட்களே இருக்கும் சூழ்நிலையில் மத்திய அரசு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது. அதன்படி டெல்லியில் அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகளில் வசித்துவரும் 40 லட்சம் டெல்லி வாசிகளுக்கு பட்ட வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் "இதன்மூலம் அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகளில் வசித்துவரும் மக்களுக்குத் தேவையான உரிமைகள் கிடைக்கும். இந்த பட்டாவைப் பெற ரூ. 200 செலுத்தினால் போதும். இதை மக்களுக்கு இலவசமாகவே கொடுக்கலாம். ஆனால், சட்டப்பூர்வமான சிக்கல்கள் வர வாய்ப்புள்ளதாலேயே குறைந்தபட்ச கட்டணத்துடன் இதை நடைமுறைப்படுத்தியுள்ளோம்" என்று கூறினார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், இது டெல்லி மக்களின் நீண்ட நாட்களாக முன்வைத்த கோரிக்கை என்றும் இதற்கு மக்கள் சார்பில் மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார்.

இதையும் படிங்க: டெல்லியில் நிர்மலா சீதாராமனுடன் அமைச்சர் வேலுமணி சந்திப்பு!

ABOUT THE AUTHOR

...view details