தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஊரடங்கால் மீண்டும் கண்களுக்கு விருந்தளித்த அரியவகை பட்டாம்பூச்சிகள்! - Litchi plantation area in Muzaffarpur

பாட்னா: ஊரடங்கால் காற்று மாசு அளவு குறைந்த காரணத்தினால், லிச்சி தோட்டப் பகுதியில் அரியவகை பட்டாம்பூச்சிகள் மீண்டும் காட்சியளிக்கின்றன.

dsd
sds

By

Published : May 9, 2020, 3:45 PM IST

ஊரடங்கால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ள காரணத்தினால், சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், காற்று மாசு அளவு குறைந்து, வெளியில் எளிதில் தென்படாத பட்டாம்பூச்சிகளைப் பார்க்கமுடிவதாக பிகாரின் முசாபர்பூர் மக்கள் தெரிவிக்கின்றனர். சுமார் 15 வகையான பட்டாம்பூச்சிகள் லிச்சி தோட்டப் பகுதியில் சுற்றிவந்துள்ளது.

இது குறித்து விலங்கியல் ஆய்வாளர்கள் கூறுகையில், "தற்போது பட்டாம்பூச்சிகள் தென்படுவது நல்ல சூழலின் அடையாளம் ஆகும். பட்டாம்பூச்சிகள் பிரச்னை இருக்கும் பகுதிகளுக்கு இடம்பெயராது.

ஊரடங்கால் மீண்டும் காட்சிதரும் அரியவகை பட்டாம்பூச்சிகள்

பட்டாம்பூச்சிகளுக்கும் சுற்றுச்சூழலுக்கு ஓர் ஒற்றுமை உண்டு. சிறிய மாற்றங்களையும் அதனால் உணர முடியும். குறைந்துவரும் மாசுபாட்டின் காரணமாக பட்டாம்பூச்சிகளும் திரும்பியிருக்கலாம்" என்றார்.

இதையும் படிங்க:'இங்கு அன்பும் அளிக்கப்படும்' - இப்படிக்கு நெல்லை தற்காலிக முகாம்!

ABOUT THE AUTHOR

...view details