தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 18, 2020, 3:52 PM IST

ETV Bharat / bharat

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்துவந்த பேருந்துகள் எல்லையில் நிறுத்தம்!

லக்னோ: முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அனுமதி வழங்காததால் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து வந்துள்ள பேருந்துகள் உத்தரப் பிரதேச எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல 500 பேருந்துகள் ஏற்பாடு
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல 500 பேருந்துகள் ஏற்பாடு

உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று (மே 17) கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், “புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக ஆயிரம் பேருந்துகளை ஏற்பாடு செய்யவுள்ளோம். இதற்கு உத்தரப் பிரதேச அரசு அனுமதியளிக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.

இதனால், ராஜஸ்தான், பிகார் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் பிரியங்கா காந்தியின் வேண்டுகோளை ஏற்று 500க்கும் மேற்பட்ட பேருந்துகளில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உத்தரப் பிரதேசத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆனால், இந்த பேருந்துகள் உத்தரப் பிரதேச எல்லையில் நிறுத்தப்பட்டன. அம்மாநிலத்துக்குள் நுழைவதற்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தற்போதுவரை அனுமதியளிக்கவில்லை எனக் கூறி பல மணிநேரமாக எல்லைக்குள் செல்லாமல் அனுமதிக்காக காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: சொந்த ஊர் திரும்புகையில் விபரீதம்: லாரி கவிழ்ந்ததில் பெண் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details