ஆந்திர மாநிலத்தில் 2019 மக்களவைத் தேர்தலோடு நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத்தேர்தலில், மொத்தமுள்ள 175 தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 151 இடங்களில் வெற்றிபெற்று அசுர பலத்துடன் அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்கவுள்ளது.
ஜெகன்மோகன் ரெட்டியை ஆந்திர மூத்த அரசு அலுவலர்கள் சந்திப்பு - andra cm
அமராவதி: ஆந்திராவின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகனை மூத்த அரசு அலுவலர்கள் சந்தித்து சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றிபெற்றதற்காக பாராட்டு தெரிவித்துள்ளனர்.
![ஜெகன்மோகன் ரெட்டியை ஆந்திர மூத்த அரசு அலுவலர்கள் சந்திப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3370821-thumbnail-3x2-jagan.jpg)
ஜகன்மோகன் ரெட்டி
இந்நிலையில், ஆந்திர மூத்த அரசின் மூத்த அலுவலர்கள், இன்று காலை அமராவதியில் உள்ள ஒ.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லம் சென்று அவருக்கு பாரட்டு தெரிவித்துள்ளனர்.
மே 30ஆம் தேதி, ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவின் முதலமைச்சராக பதவியேற்கிறார்.