தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 9, 2020, 5:04 PM IST

ETV Bharat / bharat

58 வங்கதேச நாட்டு படகுகள் 45,000 கிலோ பட்டாணி பறிமுதல்!

இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்) 45,000 கிலோ பட்டாணிகளை கடத்தி சென்ற 58 வங்கதேச நாட்டு படகுகளை கைப்பற்றினர்.

bsf
bsf

ஷிலோங்: இந்தியா- வங்கதேசம் எல்லையான மேகாலயாவில் 45,000 கிலோ உலர் பட்டாணி கொண்டு செல்லும் 58 நாட்டு படகுகளை எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எஃப்) பறிமுதல் செய்துள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

68 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பச்சை பட்டாணி பிளாஸ்டிக் பைகளில் வைத்து வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக வர்த்தகம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

மேலும், மேகலயாவின் மேற்கு ஜான்டியா ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள முக்தாபூர் எல்லை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட வீரர்கள் ஆரோக்கியமான ஊட்டச்சத்து பழங்களை பறிமுதல் செய்தனர்.

மேகாலயாவில் இந்தியா-வங்கதேசம் எல்லையில் உள்ள லக்ரா ஆற்றின் வழியாக இந்திய எல்லைக்குள் நுழைந்தபோது, ​​உலர்ந்த பட்டாணி கடத்தப்பட்ட மரப் படகுகளை எல்லைப் பாதுகாப்பு தடை தடுத்து நிறுத்தியதாக செய்தி தொடர்பாளர் யு.கே.நயல் தெரிவித்தார்.

அண்மையில் வாகனங்களுடன் பச்சை பட்டாணி ஒரு பெரிய சரக்கு பறிமுதல் செய்யப்பட்டதன் காரணமாக, கடத்தல்காரர்கள் குறுக்கீட்டைத் தவிர்ப்பதற்காக நதி வழியைப் பயன்படுத்த முயற்சித்துள்ளனர். மேகலயாவில் 443 கி.மீ இந்திய-வங்கதேச எல்லையில் நதி, அடர்ந்த காடுகள், மலைப்பாங்கான நிலப்பரப்புகள் பாதுகாப்பற்ற எல்லைகள் உள்ளன.

அப்பகுதியில் கடத்தல் மற்றும் சட்டவிரோத வர்த்தகத்திற்கும் ஏற்றதாக அது அமைந்துள்ளது என அவர் கூறினார்.

இதையும் படிங்க:அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை அமைச்சராகும் முதல் கறுப்பினத்தவர்!

ABOUT THE AUTHOR

...view details