தமிழ்நாடு

tamil nadu

எல்லையில் ஏகே-47 ரகத் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்பு!

By

Published : Sep 12, 2020, 3:32 PM IST

பஞ்சாப்: இந்திய - பாகிஸ்தான் எல்லையில் ஒரு வயலிலிருந்து மூன்று ஏகே-47, இரண்டு எம் -16 துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள், வெடி மருந்துகளை எல்லைப் பாதுகாப்புப் படையினர் (பிஎஸ்எஃப்) மீட்டுள்ளனர்.

ak47
ak47

பஞ்சாப் மாநிலம், ஃபெரோஸ்பூர் மாவட்டமானது இந்திய - பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இப்பகுதியில் வெடிமருந்துப் பொருட்கள் இருப்பதாக எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இந்தத் தகவலைத் தொடர்ந்து, ஃபெரோஸ்பூரில் உள்ள இந்திய - பாகிஸ்தான் எல்லைக்கு அருகே பாதுகாப்புப் படையினர் இன்று (செப்.12) சோதனை நடத்தினர்.

இந்தத் தேடுதல் நடவடிக்கையின்போது, காலை 7 மணியளவில் எல்லைக்கு அருகே ஒரு வயலில் சந்தேகத்துக்கு இடமாக கிடந்த ஒரு பையை சோதனை இட்டனர். அதில் மூன்று ஏகே-47 ரகத் துப்பாக்கிகள், இரண்டு எம்-16 துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை எல்லைப் பாதுகாப்புப் படையினர் மீட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details