டெல்லி: அனைத்து பிஎஸ்-6 மோட்டார் வாகனங்களில் பதிவு விவரங்களை கொண்ட ஒரு செ.மீ அளவு பச்சை நிற ஸ்டிக்கரை அரசாங்கம் கட்டாயப்படுத்தியுள்ளது.
அக்டோபர் 1, 2020 முதல் இது நடைமுறைக்கு வர உள்ளது. பிஎஸ்-6 உமிழ்வு விதிமுறைகளுக்கு இணங்க வாகனங்கள் மூன்றாவது பதிவுத் தட்டில் மேலே 1 செ.மீ அளவுக்கு பச்சை நிற ஸ்டிக்கர் ஒட்டப்படும் என்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.