கரோனா பெருந்தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் மாநிலங்களின் எல்லைகள் மூடப்பட்டன. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், அத்தியாவசிய வாகனங்களுக்கு மட்டும் எல்லையில் அனுமதியளிக்கப்பட்டு வந்தது. இந்த நெருக்கடியான சூழலில், கேரளாவில் பலகைத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த கவுரி தேவி என்ற பெண்ணுக்கு பிரவச வலி ஏற்பட்டது.
இந்த பகுதியில் உள்ள அனைவருக்குமே மங்களூரு மருத்துவமனைதான் மிகப்பெரிய நம்பிக்கை. ஆனால், கேரளாவில் ஏற்பட்ட கரோனா தொற்று காரணமாக இந்த தம்பதியினர் எல்லையைத் தாண்டி இருக்கும் மருத்துவமனைக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால், அப்பகுதியிலிருக்கும் பொது மருத்துவமனைக்குச் செல்ல முடிவெடுத்தனர். ஆனால், இந்த சர்ச்சைகள் நிறைவடைந்து, மருத்துவமனையை அடைவதற்கு வெகு நேரமாகிவிடும்.