தமிழ்நாடு

tamil nadu

கேரளாவில் தொடங்கியது ஆன்லைன் மது விற்பனை...! அரசு கட்டுப்பாடுகளில் திணறும் மதுப் பிரியர்கள்...!

By

Published : May 28, 2020, 11:08 PM IST

திருவனந்தபுரம்: மாநில அரசு வெளியிட்ட Bev Q செயலி மூலம் மதுப் பிரியர்கள் டோக்கன்களை பதிவு செய்துகொண்டு கடைக்கு படையெடுத்துள்ளனர்.

Booking
Booking

மதுபானக் கடைகளுக்கு முன்பு மக்கள் கூடுவதை தவிர்ப்பதற்காக Bev Q என்ற செயலியை கேரளா அரசு அறிமுகப்படுத்தியது. இச்செயலி மூலம் மதுபானம் வாங்குவதற்கு மக்கள் டோக்கன் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இன்று (மே 28) மதுபானம் விற்பனை தொடங்கும் என அறிவித்திருந்த நிலையில், நேற்று மாலை வரை கூகுள் பிளே ஸ்டோரில் செயலி தரவிறக்கத்திற்கு வராதததால் மதுப் பிரியர்கள் சோகத்தில் இருந்தனர். பின்னர், இரவில் தான் பிளே ஸ்டோரில் செயலி ஆன்லைனுக்கு வந்தது.

இத்தகவல் காட்டுத் தீ போல் மக்கள் மத்தியில் பரவ தொடங்கியது. ஒரே நாளில் லட்சத்திற்கும் அதிகமானோர் செயலியை தரவிறக்கம் செய்து டோக்கனை பெற்றுக்கொண்டனர். மதுபானம் விற்பனை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டது. மக்கள் டோக்கன்களை பெறுவதற்கு காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயலியில் புக்கிங் செய்ய முடியும். செயலி தரவிறக்கம் செய்யும் கைப்பேசி இல்லாதவர்கள் குறுஞ்செய்தி மூலமாகவும் டோக்கன் புக்கிங் செய்துகொள்ளலாம்.

கேரளாவில் தொடங்கிய ஆன்லைன் மது விற்பனை

மேலும், மதுபானக் கடைகளுக்கு வரும் மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு அறிவித்திருந்தது. அதன்படி, சளி, காய்ச்சல் உள்ளவர்களுக்கு கடைக்குள் அனுமதி இல்லை என்றும், ஒரே நேரத்தில் கடைக்கு வெளியில் 5 நபர்கள் மட்டுமே இருக்க அனுமதி என்றும் உத்தரவிட்டது. கடைக்கு வருபவர்கள் தகுந்த இடைவெளியை பின்புற்றுவதை உறுதிசெய்ய காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் மதுப் பிரியர் கடையை வந்துவிட வேண்டும். ஒருவேளை வருவதற்கு தாமதமாகிவிட்டால் அடுத்த நபர் மதுபானத்தை வாங்கிச் செல்வார். கடைக்கு தாமதமாக வந்தவர், மீண்டும் செயலியில் டோக்கன் புக்கிங் செய்துதான் வாங்க வேண்டும்.

இதில் மிகவும் முக்கியமானது, ஒரு தடவை டோக்கன் புக்கிங் செய்துவிட்டால், அந்நபர் ஐந்தாவது நாள்களுக்கு பிறகு தான் அடுத்த புக்கிங் செய்ய முடியும். இதுமட்டுமின்றி, கடைக்கு வாடிக்கையாளர்கள் டோக்கன் புக்கிங் செய்த செல்போனையும், அடையாள அட்டையையும் கண்டிப்பாக கொண்டு வரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மருத்துவமனையின் அலட்சியம்... கரோனாவால் கணவனை இழந்த பெண் 70 கி.மீ., நடந்த சோகம்!

ABOUT THE AUTHOR

...view details