ஒடிசா மாநிலம், கஞ்ஜம் மாவட்டம், அஸ்கா அருகே மகுரா பகுதியில் தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு பள்ளி மாணவர்கள் மதிய உணவு சாப்பிடும்போது திடீரென வெடிச்சத்தம் கேட்டுள்ளது. அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் ஓடி வந்து பார்த்தபோது, இரண்டு மாணவர்கள் பலத்த காயமடைந்த நிலையில் இருந்தனர்.
அவர்களை மீட்ட ஆசிரியர்கள், அஸ்கா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக பெர்ஹாம்பூரில் உள்ள எம்.கே.சி.ஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.