கரோனா பெருந்தொற்று காரணமாகச் சர்வதேச விநியோகச் சங்கிலிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வருங்காலத்தில் கரோனா போன்ற பெருந்தொற்றை எதிர்த்துப் போராடவும், கரோனா வைரஸ் பாதிப்பைத் தொடர்ந்து உலக நாடுகள் தங்களது பொருளாதாரத்தை விரைவில் மீட்டெடுக்க உதவும் நோக்கில் உலக பொருளாதார மாநாடு 'பிளாக்செயின் டெவலெப்மென்ட டூல்கிட்' என்ற சேவையைத் தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக உலக பொருளாதார மாநாடு வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவிட்-19 நோய் காரணமாகச் சர்வதேச வர்த்தக அமைப்பின் மீது அழுத்தம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச விநியோகச் சங்கிலிகளை வலிமையாக்க உலக நாடுகள் ஒத்துழைப்பு நல்க வேண்டிய அவசியத்தை இது உணர்த்துகிறது.