தமிழ்நாடு

tamil nadu

பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே மகாராஷ்டிரா பட்ஜெட் இன்று தாக்கல்

By

Published : Feb 24, 2020, 10:43 AM IST

மும்பை: மகாராஷ்டிராவில் விவசாயிகள் பிரச்னை அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் நிலையில், பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று அம்மாநில சட்டப்பேரவையில் அம்மாநிலத்தின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.

Maharashtra
Maharashtra

மகாராஷ்டிராவில் விவசாயிகள் பிரச்னை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில், பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே அம்மாநில சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. பட்ஜெட்டை முன்னிட்டு நடத்தப்படவுள்ள தேனீர் விருந்தில் பாஜக பங்கேற்காது என அம்மாநில முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "நவம்பர் 28ஆம் தேதி, சிவசேனா தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது. ஆனால், எந்த ஒரு திட்டமிடலும் இன்றி ஆட்சி நடைபெற்றுவருகிறது. எனவே, அரசு சார்பாக நடத்தப்படும் தேனீர் விருந்தில் பங்கேற்க மாட்டோம். ஒத்துழைப்புக்காகவே தேனீ விருந்து நடத்தப்படுகிறது. ஆனால், சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும்.

ஒரு வாக்குறுதியை கூட அவர்கள் நிறைவேற்றவில்லை. இதன் மூலம் அவர்களின் வாக்குறுதிகள் பொய் என்பது தெரியவந்துள்ளது" என்றார்.

இதையும் படிங்க: இந்திய நுண்ணூட்டச்சத்து குறைபாடுகளில் ஒரு உண்மையான தாக்கத்தை எவ்வாறு உருவாக்க முடியும்?

ABOUT THE AUTHOR

...view details