இந்தியாவில் உள்ள சுமார் 50 கோடி மக்களுக்கு மருத்துவக் காப்பீடு அளிக்கும் ஆயுஷ்மான் பாரத் என்ற இலவச மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் பங்கேற்கும் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய் அளவு மருத்துவக் காப்பீடு கிடைக்கும். இத்திட்டம் இதுவரை புதுச்சேரியில் அமல்படுத்தப்படவில்லை.
இதனைக் கண்டித்து பாஜகவினர், புதுச்சேரி ஆளும் காங்கிரஸ் அரசு நடுத்தர மக்கள், ஏழை மக்களுக்கு இத்திட்டத்தை நிறைவேற்றாமல் புதுச்சேரி காங்கிரஸ் துரோகம் விளைவிப்பதாகவும், ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை உடனே அமல்படுத்த வலியுறுத்தியும் அரசு மருத்துவமனை எதிரே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.