வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் பலமான கட்சியாக திகழும் பாஜக தென் மாநிலங்களிலும் தனது தடத்தைப் பதிக்க தீவிர முயற்சி மேற்கொண்டுவருகிறது. அதன் முக்கிய நகர்வாக ஆந்திர மாநிலம் திருப்பதி இடைத்தேர்தலை குறிவைத்து தற்போது காய்களை நகர்த்த தொடங்கியுள்ளது.
திருப்பதி மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக இருந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் பல்லி துர்கா பிரசாத் ராவ் அண்மையில் உயிரிழந்தார். இதையடுத்து, அங்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்தலை எதிர்கொள்ளும் வியூகம் தொடர்பாக அம்மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகரும் ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாணுடன் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா சந்திப்பு மேற்கொண்டார்.