குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிவடைந்தது. இந்த வன்முறையில் தலைமைக் காவலர் ரத்தன் லால், உளவுப் பிரிவு பணியாளர் 26 வயதான அன்கித் சர்மா உள்பட 42 பேர் உயிரிழந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. இந்நிலையிஸ், இமாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்தத் தலைவருமான வீர்பத்ர சிங் வீட்டிற்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா சென்றார். அப்போது, செய்தியாளர்கள் அவரிடம் டெல்லி வன்முறை குறித்து கேள்வி எழுப்பினர்.