மத்திய பிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்துவருகிறது. அக்கட்சியின் மூத்த தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா, காங்கிரஸில் இருந்து விலகி அண்மையில் பாஜகவில் இணைந்தார். அவருக்கு ஆதரவு தெரிவித்து ஆறு அமைச்சர்கள் உள்பட 22 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
இதனால் மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜீ தாண்டன், அம்மாநில சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட்டிருந்தனர். இதையடுத்து, இன்று காலை கூடிய சட்டப்பேரவையில் பேசிய அவைத் தலைவர் பிரஜபதி, கோவிட்-19 (கொரோனா) வைரஸ் பாதிப்பு காரணமாக சட்டப்பேரவையை மார்ச் 26ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார்.