தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக முயற்சி? - மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக முயற்சி

டெல்லி: மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக காங்கிரஸ் மூத்தத் தலைவர் திக்விஜய சிங் தெரிவித்துள்ளார்.

Digvijaya
Digvijaya

By

Published : Mar 3, 2020, 5:35 PM IST

மத்தியப் பிரதேசத்தில், கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 தொகுதிகளில் வென்று, சுயேச்சை, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆகியோரின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது. இதையடுத்து, மற்ற கட்சி உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவர் திக்விஜய சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், "காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களை டெல்லிக்கு அழைத்துச் செல்ல பாஜக முயல்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ரம்பையை விமானம் மூலம் பாஜக மூத்தத் தலைவர் புபேந்திர சிங் அழைத்து வரவில்லையா?. இதுகுறித்து மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் எதாவது கருத்து தெரிவிக்க விரும்புகிறாரா?

காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க அக்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு 25 முதல் 35 கோடி ரூபாய் வரை லஞ்சம் தரப்படுகிறது. பாஜக எதிர்க்கட்சி வரிசையில் அமர தயாராக இல்லை. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்களுக்கு வெளிப்படையாக லட்சம் வழங்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது" என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: உண்மையான தலைவர் யார்? - ராகுல் காந்தி விளக்கம்!

ABOUT THE AUTHOR

...view details