தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இரட்டையர்களுக்கு 'கரோனா - கோவிட்' பெயர் சூட்டிய பெற்றோர்! - இரட்டையர்களுக்கு 'கொரோனா - கோவிட்' பெயர்

பாட்னா: கயா மாவட்டத்தில் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு கரோனா, கோவிட் என பெற்றோர் பெயர் சூட்டினர்.

்ே
்ே்

By

Published : Apr 14, 2020, 10:10 AM IST

கரோனா வைரஸ் தாக்கத்தால் மக்கள் வீடுகளிலேயே முடங்கிருக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. கரோனா குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் காணொலி, குறும்படம் மூலமாக அரசு மேற்கொண்டுவருகிறது.

இந்நிலையில், பீகார் மாநிலத்தில் கயா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. அதில், ஆண் குழந்தைக்கு கோவிட் என்றும், பெண் குழந்தைக்கு கரோனா என்றும் பெற்றோர் பெயர் சூட்டியுள்ளனர்.

இதுகுறித்து குழந்தைகளின் தந்தை ஸ்ரீராம் சர்மா கூறுகையில், "நாட்டை உலுக்கும் கரோனா வைரஸ் அச்சத்தை மக்கள் மத்தியிலிருந்து அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பெயர் வைக்கப்பட்டுள்ளது" என்றார். இதற்கு முன்னதாக, ஆந்திராவில் கரோனா குமார், கரோனா குமாரி என பெயர் சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'இருவரும் ஆன் டியூட்டி' 14 மாதக் கைக்குழந்தையுடன் பணிக்கு வந்த லேடி கான்ஸ்டபிள்!

ABOUT THE AUTHOR

...view details