பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்த அக்டோபர் 28ஆம் தேதி, முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நவம்பர் மூன்றாம் தேதி நடைபெற உள்ளது. இதற்கிடையே, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் கோட்டையாக கருதப்படும் சப்ரா நகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று தனது பரப்புரையை தொடங்கினார். தேஜஸ்வி யாதவ், ராகுல் காந்தி ஆகியோரை தாக்கி பேசிய அவர், உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி, காங்கிரஸ் கட்சியை எப்படி வீழ்த்தினோமோ அதேபோல் பிகாரிலும் வீழ்த்துவோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.