தமிழ்நாடு

tamil nadu

சிறு விவசாயிக்குப் பெரிய உத்தரவாதம்.!

போதிய கல்வியறிவு, சட்டம் குறித்த புரிதல், சந்தை குறித்த விழிப்புணர்வு இருந்தால் சிறு விவசாயிகளும் பெரிதாக சாதிக்கலாம். சிறு விவசாயிகளுக்கு அளிக்கப்படும் பெரிய உத்ரவாதம் குறித்து சமூக வேளாண் ஆய்வாளரும், ஆசிரியருமான பரிதால புருஷோத்தமின் கருத்துக்களைப் பார்க்கலாம்.

By

Published : Nov 28, 2019, 10:43 PM IST

Published : Nov 28, 2019, 10:43 PM IST

Big Assurance for Small Farmer -  Center brings out law on Contract Farming
Big Assurance for Small Farmer - Center brings out law on Contract Farming

சிறு விவசாயிகளின் பொருளாதார முன்னேற்றத்தில் ஒப்பந்த வேளாண்மை முக்கிய பங்கு வகிக்கிறது. சிறு விவசாயிகள் பொருளாதார ரீதியாக வலிமையாக இருந்தால், விவசாயத் துறை மேம்படும். மேலும் முழு நாடும் பொருளாதார மேம்பாட்டு செயல்முறையின் உயர் விகித பாதையில் இருக்கும். வேளாண்மை சிறு விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள், கார்ப்பரேட் மேலாண்மை நுட்பங்கள், கடன்கள், சந்தை தகவல்கள் மற்றும் வசதிகளை வழங்குவதன் மூலம் சந்தையில் திறம்பட போட்டியிடும் திறனை வழங்குகிறது.

இந்த வகை சாகுபடி சிறு விவசாயிகளின் பரிவர்த்தனை செலவைக் குறைக்கிறது. விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்யும் நிறுவனங்கள் மேம்பட்ட விவசாய நுட்பங்கள், இயந்திரங்கள், உரம், கடன்கள் மற்றும் பயிர்களின் தரத்தை மேம்படுத்த உதவும் முதலீடுகளை அவர்களுக்கு வழங்குகின்றன.ஒப்பந்த வேளாண்மை வெற்றிகரமாக இருக்கும்போது உணவு ஒப்பந்தத் தொழில்கள் மற்றும் விவசாய ஏற்றுமதிகள் செழித்து வளரக்கூடும். இது கிராம மக்களின் வருமானத்தை அதிகரிக்கிறது. இதனால் கிராமங்கள் பொருளாதார ரீதியாக முன்னேறுகின்றன.

விதிமுறை மீறல்
நிறுவனங்களும் விவசாயிகளும் ஒப்பந்தங்களை மீறிய சம்பவங்கள் பல உள்ளன. ஒப்பந்தத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட விலையை விட சந்தை விலை அதிகமாக இருந்தால் விவசாயிகள் ஒப்பந்தத்தை மீறுகிறார்கள். ஒரு ஒப்பந்தத்தில் சந்தை விலை ஒப்புக்கொண்டதை விட மிகக் குறைவாக இருந்தால் நிறுவனங்கள் மீறுகின்றன. சித்தூர் மாவட்டத்தில் தக்காளி விவசாயிகள் இந்த கசப்பான அனுபவத்தை மீண்டும் மீண்டும் எதிர்கொள்கின்றனர்.

பிராய்லர் கோழி வளர்ப்பு
இங்குள்ள நிறுவனங்கள் விவசாயிகளுடன் சந்தையுடன் ஒப்பிடுகையில் நல்ல விலையை வாங்க முடியாது என்று நினைத்தபோது பலமுறை ஒப்பந்தங்களை மீறியுள்ளன. ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மாற்றுவது நிறுவனங்களுக்கு மீண்டும் மீண்டும் விருப்பமாகி வருகிறது. பிராய்லர் கோழிகள் வளர்ப்பில் நிறுவனங்கள் தமிழக விவசாயிகளை ஏமாற்றியுள்ளன. 2018-19 பட்ஜெட் அமர்வில் ஒப்பந்த வேளாண்மை சட்டத்தை அறிமுகப்படுத்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

புதிய சட்டம்
இந்தச் வேளாண்மை ஒப்பந்த சட்டத்தை செயல்படுத்த கிராம மட்டத்தில் ஒப்பந்த வேளாண் ஊக்குவிப்புப் பிரிவு அமைக்கப்படும். ஒப்பந்த வேளாண் சட்டத்தை அமல்படுத்துவது விவசாய பொருட்களின் சந்தைப்படுத்தல் குழுக்கள் அல்லது மண்டிகளில் உள்ள பல்வேறு முறைகேடுகளிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்க முடியும். வர்த்தகர்கள் மற்றும் இடைத்தரகர்கள் இந்த மண்டிகளில் ஒரு கூட்டணியை உருவாக்கி விவசாயிகளை ஒன்றாக ஏமாற்றுகிறார்கள் என்று நீண்ட காலமாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த புதிய சட்டம் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

நெறிமுறை
ஒப்பந்தச் சட்டங்கள் விரும்பிய முடிவைக் கொடுப்பதை உறுதி செய்ய சில குறைந்தபட்ச முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பண்ணை, கிராமம் மற்றும் சந்தை மட்டத்தில் பயிர்கள் மற்றும் பால் பொருட்களை தரம் பிரிப்பதற்கான ஒரு நெறிமுறையை நிறுவ வேண்டும். அபராதம், முறையீடுகள் மற்றும் தகராறு தீர்க்கும் ஏற்பாடுகள் இருக்க வேண்டும். நடுவர் ஆலோசனைகள் மோதல்களைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை நிறுவ வேண்டும். மாநில அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் 15 நாட்களுக்குள் மோதல்களைத் தீர்க்க வேண்டும்.

விவசாய பயிர்கள் (கோப்பு படம்)

விவசாய கடன்
எவ்வாறாயினும் இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதில் எழும் சர்ச்சைகள் குறித்து தீர்ப்பளிக்க எந்த சிவில் நீதிமன்றத்திற்கும் அதிகாரம் இல்லை. இந்தச் சட்டம் குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தர நிர்ணய நெறிமுறையை நிறுவுதல் மற்றும் சேமிப்பு வசதிகள் (குளிர்பதன வசதிகளுடன் கூடிய) மேம்படுத்தப்பட வேண்டும். மேலும் கடன் சுறா மீன்களுக்கு (கந்து வட்டி கும்பல்கள்) பலியாகாமல் இருக்க விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் நிறுவன கடன்கள் வழங்கப்பட வேண்டும்.

சுயநலன்
ஒரு சில வணிகர்கள் மற்றும் நடுத்தர மனிதர்களின் சுயநல தேவைகளை நீக்கினால் பயிர் விலை சரிவை சட்டத்தால் குறைக்க முடியும். ஆக, இந்த வகையான புதிய சட்டங்கள் விடாமுயற்சியுடனும் நேர்மையுடனும் செயல்படுத்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
இந்தியாவில், பூக்கள், பழங்கள், காய்கறிகள், முட்டை, இறைச்சி, பால் மற்றும் மீன்வளம் போன்ற பயிர்கள் ஒப்பந்த வேளாண்மையின் கீழ் செழித்துள்ளன. எனினும் விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பதில்லை.

சட்ட பாதுகாப்பு
பெரும்பாலான விவசாயிகள் மற்றும் நிறுவனங்கள் ஏற்கனவே ஒப்பந்த விவசாயத்தில் ஈடுபட்டுள்ளன. சட்டப்பூர்வமாக பொறுப்புக் கூறும் கட்சிகள் இல்லாதது ஒரு பெரிய குறைபாடு. இதுவரை, அனைத்து ஒப்பந்தங்களும் பரஸ்பர நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவை. நீர்ப்பாசன விவசாயத்தின் கீழ் நிலத்தின் அளவு வேகமாக அதிகரித்து வருகிறது. விவசாயிகள், நிறுவனங்கள் மற்றும் விவசாயத்தில் கூட்டு நிறுவனங்கள் விரிவடைந்து வருகின்றன. ஒப்பந்த விவசாயத்தில் உள்ள சிறு விவசாயிகள் சுரண்டலுக்கு எதிராக பாதுகாப்புப்பெற சட்ட மற்றும் நீதித்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

வானம் பார்த்த ஏக்கத்தில் விவசாயி (கோப்பு படம்)

சாதிக்கலாம்
பொதுவாக ஒப்பந்த விவசாயத்திற்கு செல்லும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரிய விவசாயிகளுடன் கூட்டாளர்களாக விரும்புகின்றன. சிறு விவசாயிகளின் கல்வியறிவின்மை, முதலீட்டின் பற்றாக்குறை மற்றும் நவீன விவசாய முறைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாததால் நிறுவனங்கள் பெரிய விவசாயிகளிடம் திரும்புகின்றன. ஒரு பெரிய நிறுவனம் நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான சிறு விவசாயிகளிடமிருந்து விவசாய பொருட்களை வாங்குகிறது. பொருளாதார சாத்தியக்கூறு மற்றும் சந்தை நிலைமைகள் மற்றும் ஏற்ற இறக்கங்கள் குறித்த விழிப்புணர்வு இல்லாததால் சிறு விவசாயிகள் குறைந்த விலையில் பயிர்களை விற்கிற பல சம்பவங்கள் உள்ளன. இந்த நிலை மாறும்பட்சத்தில் சிறு விவசாயிகளும் பெரிய அளவில் சாதிக்கலாம்.

இதையும் படிங்க: இழப்பில் விவசாயிகள், செழிப்பில் இடைத்தரகர்கள்.!

ABOUT THE AUTHOR

...view details