தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பீமா கோரிகான் வழக்கு: நீரிழிவு நோயால் அவதிப்படும் சுதா பரத்வாஜ்! - எல்கர் பரிஷாத் வழக்கு

மும்பை: பீமா கோரிகான் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு பைகுல்லா சிறையில் வைக்கப்பட்டுள்ள சமூக செயற்பாட்டாளர் சுதா பரத்வாஜுக்கு நீரிழிவு நோய், இஸ்மிக் நோய்க்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சிறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Bhima Koregaon  Sudha Bharadwaj  diabetes  Elgaar Parishad  Varavara Rao  பீமா கோரிகான் வழக்கு  சுதா பரத்வாஜ்  எல்கர் பரிஷாத் வழக்கு  வரவரராவ்
பீமா கோரிகான்: நீரிழிவு நோய்,இஸ்மிக் நோயால் அவதிப்படும் சுதா பரத்வாஜ்

By

Published : Jul 25, 2020, 4:44 AM IST

ஆண்டுதோறும் ஜனவரி 1ஆம் தேதி புனேவிலுள்ள பீமா கோரிகான் கிராமத்திலுள்ள பீமா கோரிகான் நினைவுச் சின்னத்துக்கு மகராஷ்டிராவிலுள்ள மகர்கள் மரியாதை செலுத்துவர். கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற நினைவு நாள் நிகழ்வில் மிகப்பெரிய கலவரம் வெடித்தது. இதில், ஒருவர் உயிரிழந்ததோடு, பலர் காயமடைந்தனர்.

2018 ஜனவரி 1ஆம் தேதி பீமா கோரிகான் நினைவுச் சின்னத்துக்கு மரியாதை செலுத்தச் சென்ற கார்கள், நபர்கள் மீது காவிக்கொடி ஏந்திய கும்பல் ஒன்று கற்களை வீசித்தாக்கியதால் கலவரம் வெடித்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ஆனால், இக்கலவரத்திற்கு காரணமானவர்கள் என இந்திய அரசு சமூக செயற்பாட்டாளர்கள் சிலரைக் கைது செய்தது.

அதில், ஒருவரான சுதா பரத்வாஜ் நீரிழிவு நோயாலும், இஸ்மிக் நோயாலும் அவதிப்பட்டுவந்தார். இதுகுறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சிறை நிர்வாகம், அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அவரது உடல்நிலை இயல்பாக இருக்கிறது என்று சிறை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட கவிஞர் வரவரராவ், சில நாட்களுக்கு முன்பு சுயநினைவை இழந்துவிட்டதாகவும் அவருக்கு சிகிச்சையளிக்க பிணை கோரியும் அவரது குடும்பத்தார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்னர். தொடர்ச்சியாக பிணை மறுத்து வந்த நீதிமன்றம் பல்வேறு சட்டப்போராடங்களுக்குப் பிறகு பிணை வழங்கியது. அதற்குள் அவரது உடல் மோசமடைந்துவிட்டதோடு கோவிட்-19 தொற்றும் ஏற்பட்டது.

இந்தபெருந்தொற்று காலத்திலாவது, பீமா கோரிகன் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்களின் மருத்துவ காரணங்களுக்காக பிணை வழங்கவேண்டும் என பல்வேறு அரசியல் இயக்கத்தினர், அறிவுஜீவிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:உடல்நிலையை காரணம் காட்டி வரவர ராவ் பிணை கோருவதில் உள்நோக்கம் உள்ளது - தேசிய புலனாய்வு முகமை

ABOUT THE AUTHOR

...view details