தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவின் பீம் செயலி, சிங்கப்பூரில் பயன்பாடு - சிங்கப்பூரில் பீம் செயலி

டெல்லி: இந்தியாவின் பீம் (BHIM UPI) செயலி QR- அடிப்படையில் சிங்கப்பூரில் செயல்படவுள்ளது.

BHIM UPI goes global

By

Published : Nov 13, 2019, 3:22 PM IST

சிங்கப்பூர் ஃபின்டெக் திருவிழா கடந்த 11ஆம் தேதி தொடங்கியது. இந்த விழா வருகிற 15ஆம் தேதியோடு நிறைவு பெறுகிறது. இங்கு இந்தியாவின் பீம் செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது இந்த QR குறியீடு அடிப்படையிலான அமைப்பு BHIM பயன்பாட்டைக் கொண்ட எவரும் சிங்கப்பூரில் பணம் செலுத்துவதற்காக இணைய முனையங்களில் QR ஐ ஸ்கேன் செய்ய அனுமதிக்கும்.

இதுகுறித்து இந்தியாவைச் சேர்ந்த ஜாவேத் அஷ்ரப் கூறுகையில், “பீம் பயன்பாடு சர்வதேச அளவில் செல்வது இதுவே முதல் முறை. இந்த திட்டத்தை தேசிய பணம் செலுத்துதல் கழகம் (National Payments Corporation of India) மற்றும் சிங்கப்பூரின் மின்னணு இடமாற்றங்களுக்கான நெட்வொர்க் (நெட்ஸ்) இணைந்து உருவாக்கி வருகின்றன. கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் ரூபே இன்டர்நேஷனல் கார்டு மற்றும் எஸ்.பி.ஐ., பணம் அனுப்பும் பயன்பாடு அறிமுகப்படுத்தப்பட்டது” என்றார்.

அதன் பின்னர், இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான ஃபின்-டெக் (நிதி தொழில்நுட்ப) ஒத்துழைப்புக்கான மற்றொரு சாதனை இது" என்று அஷ்ரப் கூறினார். இந்த விழாவில், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தானது.

இந்தியாவில் 70 மில்லியன் வர்த்தகர்களை அதன் உறுப்பினர்களாகக் கொண்ட அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) ஏற்கனவே மாஸ்டர்கார்டு குளோபல்லிங்கர் வழங்கிய ஒரு தளத்தின் மூலம் பிஎஸ்பி நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் ஃபின்டெக் திருவிழா 2019 இல் இந்தியக் குழு மிகப்பெரியது, 43 நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப்கள் இந்தியாவில் இருந்து பங்கேற்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அமெரிக்கா-சீனா வர்த்தகப் போரால் விநியோக சங்கிலிக்கு கேடு: சிங்கப்பூர் துணைப் பிரதமர்

ABOUT THE AUTHOR

...view details