தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 17, 2020, 3:44 PM IST

ETV Bharat / bharat

6 வருடத்திற்கு பின் 60 அடியை எட்டிய கோதாவரி - மாவட்ட நிர்வாகம் 3ஆம் கட்ட எச்சரிக்கை!

கோதாவரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வரும் நிலையில், ஆறு வருடத்திற்கு பின் 60 அடியை எட்டியுள்ளதால் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

bhadrachalam-godavari-water-level-reached-record-level-60-feet-after-6-years-of-gap
bhadrachalam-godavari-water-level-reached-record-level-60-feet-after-6-years-of-gap

மகாராஷ்டிரா, தெலங்கானா மாநிலங்களில் கன மழை பெய்து வருவதால், கோதாவரி ஆற்றின் நீர் அளவு 60 அடியை எட்டியுள்ளது. ஆறு வருடத்திற்கு பிறகு கோதாவரி ஆற்றின் நீர் அளவு 60 அடியை எட்டியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு மூன்றாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கோதாவரி ஆற்றில் மூன்றாம் கட்ட எச்சரிக்கை 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விடுக்கப்பட்டது. அப்போது அதிகபட்சமாக 56.1 அடி என பதிவு செய்யப்பட்டது. இதற்கு முன்னதாக அதிகபட்சமாக 1986ஆம் ஆண்டு 75.6 அடி பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் பத்ரச்சலம் பகுதியில் கோதாவரி ஆற்றின் நீரின் அளவு 60 அடியைக் கடந்துள்ளது. இன்று இரவு 9 மணிக்குள் ஆற்றின் அளவு 63 அடியைக் கடக்கும் என மத்திய நீர் ஆணையம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பத்ரச்சலம் பகுதிகளுக்கு பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

6 வருடத்திற்கு பின் 60 அடியை எட்டிய கோதாவரி

இதையும் படிங்க:விடியவிடிய வெள்ளத்தின் நடுவே சிக்கிய இளைஞர்; பத்திரமாக மீட்ட விமானப்படை

ABOUT THE AUTHOR

...view details